திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. இவற்றை கண்டு ரசித்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பள்ளங்கி அடிசரை பகுதியில் உள்ள பெப்பர் அருவி என்ற புதிய சுற்றுலாத் தலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் சரவணன் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின் பெப்பர் அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்தார். இதையடுத்து நேற்று முதல் பெப்பர் அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post கொடைக்கானலில் பெப்பர் அருவி செல்ல அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.