பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன்(48). இவரது மகன் விக்னேஸ்வரன் (27). நாகப்பனின் மாமனார் முனியாண்டி (70), பால் வியாபாரி. வீட்டின் அருகே நிலத்தில் கொட்டகை அமைத்து மாடுகளை பராமரித்து வருகிறார். நேற்று காலை முனியாண்டி பால் கறப்பதற்காக மாட்டுக்கொட்டகைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு கொட்டகையை தாங்கி பிடிக்கும் இரும்பு பைப்பை பிடித்துள்ளார். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் முனியாண்டி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரது பேரன் விக்னேஸ்வரன், தாத்தா முனியாண்டி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை தூக்கியுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தாத்தாவின் உடல் மீது சரிந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
The post மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி: காப்பாற்ற முயன்ற பேரனும் சாவு appeared first on Dinakaran.