போடியில் மதுபாட்டில் பதுக்கியவர்கள் கைது

போடி, மே 21: தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெம்பக்கோட்டை பகுதியில் லட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கதிரியப்பன் (66) உரிய அனுமதியின்றி வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, போடி அருகே மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவைச் சேர்ந்த முருகன் (45) என்பவர் பதுக்கி வைத்திருந்த 7 பாட்டில்களையும், விசுவாசபுரத்தை சேர்ந்த சேர்மலை (70) என்பவர் பதுக்கியிருந்த 10 பாட்டில்களையும் பறிமுதல் செய்தார். இதனையடுத்து அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போடியில் மதுபாட்டில் பதுக்கியவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: