சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆண்டு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற பெயரில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் 90வது நாளான நேற்று சென்னை புரசைவாக்கம் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சியை பொறுத்தவரை, துப்புகெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். ஆட்சியைப் பொறுத்தவரை தவறு நடக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம் சாட்ட வேண்டும். பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்த காலகட்டத்தில் தள்ளாடிக்கொண்டே இருந்தவர்களை பார்த்து வந்தவர் தமிழிசை. அதனால் எதுவாக இருந்தாலும் அவருக்கு தள்ளாட்டமாக தெரிகிறது. தமிழிசைக்கு மீடியா மேனியா. அதனால் அவர் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் நின்று கொண்டிருக்கும் சாலை எப்படி இருக்கிறது என்று அடுத்த முறை நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழிசைக்கு மீடியா மேனியா: அமைச்சர் சேகர்பாபு காட்டம் appeared first on Dinakaran.