கரைப்புதூரில் விஷவாயு தாக்கி 3பேர் பலி: தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை ஒப்புதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கரைப்புதூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் சாய ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் நேற்று உயிரிழந்தனர். வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை ஒப்புதல் அளித்துள்ளது.

The post கரைப்புதூரில் விஷவாயு தாக்கி 3பேர் பலி: தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: