ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை அடுத்து தேர்வுத்துறை விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த தேர்வு மையத்தில் தேர்வுத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். மாணவர்கள் மிகவும் திறம்பட விடைத்தாளை எழுதி உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையை தேர்வுத்துறை இயக்குநரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதில், மாணவர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்ததில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
The post செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை: தேர்வுத்துறை அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.