உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி ஓய்வு


புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2021 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டவர் பேலா திரிவேதி. குஜராத்தில் மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த அவர் பின்னர் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், அமெரிக்காவில் நடைபெறும் குடும்ப விழாவில் பங்கேற்க வேண்டி உள்ளதால் பேலா திரிவேதி முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பினார். வழக்கமாக உச்ச நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவுபசார விழா நடைபெறும்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் 11வது பெண் நீதிபதியான பேலா திரிவேதிக்கு பிரிவுபசார விழா நடத்த வக்கீல்கள் சங்கம் மறுத்துவிட்டது. அவரை வழியனுப்ப நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், மூத்த நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஸிக் அடங்கிய சிறப்பு பெஞ்ச் நேற்று கூடியது. இதில் பேசிய தலைமை நீதிபதி கவாய், நீதிபதி பேலா திரிவேதியின் நேர்மை, உறுதி, கடின உழைப்பை பாராட்டினார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: