அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பி.வில்சன் ஆகியோர் வாதத்தில், “குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட போது அவர் மேயராக இருந்தார். ஆனால் தற்போது அமைச்சராக இருந்து வருகிறார். எனவே இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட வழக்கு. நான் மேயர் என்பதால் அரசிடமிருந்துதான் என்னை விசாரிக்க ஒப்புதல் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிதி மீறல். எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை, அப்படி இருக்கையில் இந்த குற்றச்சாட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
The post சட்ட விதிகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல் முறையீடு appeared first on Dinakaran.