சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. இந்நிலையில், பனையூரில் நேற்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்கவில்லை. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பனையூரில்தான் விஜய்யின் பங்களா இருக்கிறது. அப்படி இருந்தும் அவர் கூட்டத்துக்கு வராதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கான்பரன்சிங்கிலாவது வந்து விஜய் பேசுவாரா என்று நிர்வாகிகள் எதிர்பார்ப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
The post மாவட்ட செயலாளர் கூட்டம் நடிகர் விஜய் புறக்கணிப்பு appeared first on Dinakaran.