கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு ஜூலை 19க்கு ஒத்திவைக்கப்பட்டது. 2022ல் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி 2022 ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.