இறால் பண்ணைக்கு கணவன் காவலுக்கு சென்றபோது மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்: கையும், களவுமாக சிக்கினர்; கதவை பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல்


திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (40). அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (33). பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி ஆசிரியையாக உள்ளார். 7 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் நாகலட்சுமிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் மணிகண்டன் (24) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு சாட்டிங் செய்து வந்தனர். இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனையறிந்த லட்சுமணன், இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வழக்கம்போல் இறால் பண்ணைக்கு லட்சுமணன் சென்றுவிட்டார். அப்போது நாகலட்சுமி, போன் செய்து மணிகண்டனை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் 7 வயது மகன் தூங்கிக்கொண்டிருந்த அதே அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை கையும் களவுமாக பிடிக்க அதிகாலை லட்சுமணன் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தார். உடனடியாக வெளியே கதவை பூட்டு விட்டு போலீசார் மற்றும் உறவினர்களுக்கு ேபான் செய்து தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து இருவரையும் வெளியே அழைத்து விசாரித்தனர். அப்போது மணிகண்டனை லட்சுமணன் தாக்க முயன்றார். அதனை போலீசார் தடுத்தனர். பின்னர் மணிகண்டனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

The post இறால் பண்ணைக்கு கணவன் காவலுக்கு சென்றபோது மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்: கையும், களவுமாக சிக்கினர்; கதவை பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: