பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்துள்ளார். திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோர் குற்றாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கும் தண்டனை விவரங்கள் பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகாரின்பேரில், பொள்ளாச்சி டவுன் போலீசார் முதலில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் 2019ல் கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைதாகினர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததையடுத்து, கைதான 9 பேரிடம் சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வழக்கு விசாரணை சூடுபிடித்தது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இரு தரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர்.நந்தினிதேவி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டதால், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாள் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: