மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், உடலியல், நலவியல் உள்ளிட்ட 33 பிரிவுகளில் பரிசுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008. தொலைபேசி எண்கள். 044 – 28190412, 28190413 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchithurai.org/siranthanool இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் ரூ.10 அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100 “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை சேர்த்து அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 16ம் தேதி அனுப்பி வைக்க வேண்டும்.
The post தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.