அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி என அன்னையர் தினத்திற்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம். அன்னைக்கான நன்றிக்கடனை நம்மால் அடைக்கவே முடியாது. ஆகவே ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம்.

அன்னையர் வாழ்க. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்புமணி விடுத்த அறிக்கை: அம்மா என்ற சொல்லுக்குத் தான் உலகில் எத்தனை அர்த்தங்கள். அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு, ஊக்கமளிப்பு, மகவுகளை சாதிக்கத் தூண்டும் சக்தி, என அம்மாவுக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் உண்டு. ஆனால், இவை அனைத்திற்குள்ளும் அடங்காமல் புதிய, புதிய பரிமாணங்களை எடுத்து, அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா. அவர்களை என்றென்றும் வணங்குவோம்.

The post அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: