உப்பு நாரத்தங்காய் ஊறுகாய்

தேவையானவை:

நாரத்தங்காய் – 2,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில் காயவிடவும். இப்படியே ஒரு வாரம் வரை காயவிட்டால்… உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் ரெடி.

The post உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் appeared first on Dinakaran.