காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்றும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75% பணம் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், 50% பணம் திரும்ப கிடைக்கும், அதே நேரத்தில் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றங்கள் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. குறைந்த கட்டணம் என்கின்ற காரணத்தினால் ஏழை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரயில்வே துறையின் இந்த அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அறிவிப்புகளை ரயில்வே துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது : மே 1 முதல் புதிய நடைமுறைகள் அமல்!! appeared first on Dinakaran.