தேனி மாவட்டம் இரட்டைக் கொலை வழக்கில் ராணுவ வீரர் போலீசாரால் கைது

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் சுந்தர் (55) – ராஜேந்திரன் (60) இடையே இடப் பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் (31) விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள நிலையில், நேற்றிரவு தகராறு முற்றியதில் சுந்தர் மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.

The post தேனி மாவட்டம் இரட்டைக் கொலை வழக்கில் ராணுவ வீரர் போலீசாரால் கைது appeared first on Dinakaran.

Related Stories: