இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த விருதுநகர் கிழக்கு போலீசார், வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நடைபெற்று வருகிறது. நேற்று நீதித்துறை நடுவர் ஐயப்பன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். இதையடுத்து விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
The post வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.