இதனிடையே தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று அறிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை நீதிமன்றம் அறிவித்த நிலையில், அந்த நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். நீதிபதி மாற்றத்தால் இந்த வழக்கில் அறிவித்தபடி தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, அரசாணை பிறப்பித்த பிறகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி அந்த பொறுப்பை ஏற்க முடியும் என்பதாலும் பணியிட மாற்ற நடைமுறைக்கு சிறிது காலமாகும் என்பதாலும் அறிவித்தப்படி தீர்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13ல் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்!! appeared first on Dinakaran.