அன்புமணி மீதான வழக்கு ரத்து

சென்னை: கடந்த 2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்ததை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்.எல்.சி அலுவலகத்தின் நுழைவாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினார்.இதுதொடர்பாக நெய்வேலி காவல்துறைஅவர் மீது வழக்கு பதிந்தனர். இதை ரத்து செய்யக்கோரி அன்புமணி ஐகோர்ட்டில் மனு செய்தார். வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post அன்புமணி மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: