இந்த நிலையில், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல், நெல்லை ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
The post ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: சென்னையில் பாதுகாப்பு தீவிரம் appeared first on Dinakaran.