புதுடெல்லி: கடந்த 2008ம் ஆண்டு அரியானாவில் உள்ள மானேசர்,குருகிராம் ஆகிய இடங்களில் நிலம் வாங்கி விற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக அரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. இதில்,சட்ட விரோத பண மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.மேலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை கடந்த 2 நாட்களில் 10 மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று 3வது நாளாக அவர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் ராபர்ட் வதேரா கூறுகையில்,‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஈடியின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ஆயிரக்கணக்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். ’’ என்றார். அதிகாரிகள் கூறுகையில், ராபர்ட் வதேராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றனர்.
The post அரியானா நில பேரம் வழக்கு அமலாக்க அலுவலகத்தில் 3வது நாளாக ராபர்ட் வதேரா ஆஜர் appeared first on Dinakaran.