மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 2 கார் நேருக்கு ேநர் மோதி தந்தை பலி

நெய்வேலி, ஏப். 17: மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, 2 கார் நேருக்கு நேர் மோதி தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த விஜயநகரம் புது இளவரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்(34). இவரது மனைவி தனலட்சுமி(28). இந்நிலையில் இவர்களது 2 வயது மகன் கோகுலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மகன் கோகுலுடன், மனைவி தனலட்சுமி, தனது சகோதரி பவானி ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு வடலூர் வழியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். வடலூர் அடுத்த வீணங்கேணி பாலம் அருகே வந்தபோது, எதிரே வடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஓட்டி சென்ற கார் மீது ேநருக்கு நேர் மோதியது. இதில் ராஜ்குமார், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ராஜ்குமார் மனைவி, மகன் மற்றும் அவரின் சகோதரி ஆகியோரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து ராஜ்குமார் தந்தை ராஜேந்திரன் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 2 கார் நேருக்கு ேநர் மோதி தந்தை பலி appeared first on Dinakaran.

Related Stories: