மார்க்சிஸ்ட் மாநாடு இன்றுடன் நிறைவு பொதுச்செயலாளர் இன்று தேர்வு: மாலையில் பிரமாண்ட பேரணி

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாடு இன்று முடிகிறது. புதிய பொதுச்செயலாளர் தேர்வும் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் நடந்த மாநில உரிமைக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா உயர்கல்வித் துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் பேசினர்.

மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநாட்டின் நிறைவாக மாலை 3 மணிக்கு பாண்டி கோயில் ரிங்ரோட்டில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் பேரணி நடக்கிறது. ரிங் ரோட்டில் மஸ்தான்பட்டி அருகே பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

The post மார்க்சிஸ்ட் மாநாடு இன்றுடன் நிறைவு பொதுச்செயலாளர் இன்று தேர்வு: மாலையில் பிரமாண்ட பேரணி appeared first on Dinakaran.

Related Stories: