மாவட்டம் முழுவதும் இன்று மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஏப். 5: சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மின் கட்டண தொகை, மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பம் உள்ளிட்ட மின் பயனீடு குறித்த புகார்கள் இருப்பின் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மதகுபட்டி, மலம்பட்டி பகுதி மின் நுகர்வோர்,

மானாமதுரை மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி மின் நுகர்வோர், திருப்பத்தூர் மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, ஆ.தெக்கூர், கீழச்சிவல்பட்டி பகுதி மின் நுகர்வோர், காரைக்குடி மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலகத்தில் காரைக்குடி, கண்டரமாணிக்கம், கல்லல், புதுவயல், தேவகோட்டை, கானாடுகாத்தான் பகுதி மின் நுகர்வோர், கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மாவட்டம் முழுவதும் இன்று மின் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: