வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஊழியர்கள் பணி நீக்கம்: அதிபர் டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் தடை

நியூயார்க்: சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்பது அமெரிக்க அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் உலகின் மிகப்பெரிய சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்துக்கு கடந்த எட்டு தசாப்தங்களாக அரசு நிதியளித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன் 1200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த பெடரல் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் பால் ஓட்கென் வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.

ஊழியர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யவோ, குறைக்கவோ, விடுப்பில் அனுப்பவோ கூடாது என்றும், எந்த அலுவலகங்களையும் மூடவோ அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிற்கு திரும்பவேண்டும் என்று கோரவோ கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஊழியர்கள் பணி நீக்கம்: அதிபர் டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: