அரசு இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: கட்சியினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

 

திருப்பூர், மார்ச்28:திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டரின் நோ்முக உதவியாளர் மகாராஜ் தலைமை தாங்கி பேசியதாவது: அரசியல் கட்சியினா் கொடிக்கம்பங்கள் அரசு இடங்களில் இருந்தால், அதனை அகற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால், துறை சார்ந்த அதிகாரிகளால் கொடிக்கம்பம் அகற்றப்படும். அரசியல் கட்சியினர் இந்த உத்தரவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.இதில் சப் கலெக்டா் (திருப்பூர்) மோகன சுந்தரம் பெலிக்ஸ் ராஜா (தாராபுரம்) மற்றும் அரசியல் கட்சியினா் கலந்துகொண்டனா்.

 

The post அரசு இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: கட்சியினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: