சீருடை அளவெடுக்கும்போது பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: டெய்லர், ஆசிரியை மீது வழக்கு

மதுரை: சீருடை அளவெடுக்கும்போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாக டெய்லர் உள்ளிட்ட 3 பேர் மீது, போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரையில் மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் ஆண் மற்றும் பெண் டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சீருடைகளை தைப்பதற்காக மாணவிகளிடம் அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாணவிகளுக்கு அளவெடுக்க ஆண் டெய்லரை ஏன் அழைத்து வந்தீர்கள். பெண் டெய்லர் மூலம் அளவெடுக்கலாமே என கூறியுள்ளார். மேலும், தனக்கு ஆண் டெய்லர் அளவெடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால், ஆசிரியை ஒருவர் அவரிடம் தான் அளவெடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஆண் டெய்லர் மாணவிக்கு அளவெடுத்தார்.

இந்நிலையில், ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும்போது தனது உடல் பாகங்களை தொட்டார் என்றும், அவர் மீதும், என்னை கட்டாயப்படுத்திய ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 10ம் வகுப்பு மாணவி மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், அளவெடுத்த டெய்லர் மீதும், கட்டாயப்படுத்திய ஆசிரியை, உடந்தையாக இருந்த பெண் டெய்லர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சீருடை அளவெடுக்கும்போது பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: டெய்லர், ஆசிரியை மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: