சென்னை: புதிய பூங்காக்கள் அமைக்கத் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. புதிய பூங்காக்களை அமைக்கத் தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
The post புதிய பூங்காக்கள் அமைக்கத் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவிப்பு! appeared first on Dinakaran.