டாஸ்மாக் பாரில் திடீர் தீ

நாமக்கல், மார்ச் 26:நாமக்கல்- திருச்சி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் கணேசபுரத்தை சேர்ந்த சேகர் என்பவர் டாஸ்மாக் நிறுவனத்தில் அனுமதி பெற்று பார் நடத்தி வருகிறார். நேற்று மாலை, திடீரென பாரில் பிரிட்ஜ் பிரிசரில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவி, தகர கொட்டகையில் பற்றி எரிந்தது. இதனால் மதுக்கடையில் மது குடித்து கொண்டிருந்த குடிமகன்கள் அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து, அருகில் இருந்த மதுக்கடை பூட்டப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் 2 மணி நேரம் போராடி முற்றிலுமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பாரில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டாஸ்மாக் பாரில் திடீர் தீ appeared first on Dinakaran.

Related Stories: