சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு நாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

 

ஜெயங்கொண்டம், மார்ச் 24: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி அருகில் பாரதிதாசன் பொது நல மன்றம் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாவீரர்கள் பகத் சிங், ராஜா குரு, சுகதேவ் தோழர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இந்நிகழ்சியில் பாரதிதாசன் பொது நல மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் மாலை அணிவகுத்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மன்ற நிர்வாகிகள் சேகர்,எழிலன்,உதய சூரியன், சரண்ராஜ் ,ராமு மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர் .

The post சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு நாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: