தியாகிகள் தினம் பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: தியாகிகள் தினத்தையொட்டி புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘இன்று, நமது நாடு பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவுகூர்கிறது. சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது’’ என தெரிவித்துள்ளார். கடந்த 1929ம் ஆண்டு ஏப்ரலில் சென்ட்ரல் அசெம்ப்ளி ஹாலில்குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயரால் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

The post தியாகிகள் தினம் பிரதமர் மோடி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: