உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள்: வங்கக் கடலின் ஓரத்திலே சிங்கம் சிஎஸ்கே குகையினிலே: மும்பைக்கு இன்று முதல் மோதல்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் காணுகின்றன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னிலையில் இருக்கும் அணிகள் என்பதால் இன்றைய ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மெகா ஏலத்துக்கு பிறகு இரு அணிகளும் பல்வேறு மாற்றங்களுடன் களம் காண உள்ளன. பெயருக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும் வழக்கம்போல் எம்.எஸ்.தோனி தான் அணியை வழி நடத்துவார்.

அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு வீரர்கள் அஸ்வின், விஜய் சங்கர், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும் டெவன் கான்வே, சாம் கரன், ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, நுார் அகமது, மதீசா பதிரனா ஆகியோர் அணியில் முக்கிய பங்கு வகிப்பர். மும்பை அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதல் ஆட்டத்தில் விளையாட தடை இருப்பதால் சூர்யகுமார் அணியை வழி நடத்துவார். பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்றாலும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, டிரென்ட் போல்ட், முஜிபுர் ரகுமான், கார்பின் போஷ், மிட்செல் சான்ட்னர், திலக் வர்மா போன்றவர்கள் அணியை கரை சேர்க்க போராடுவார்கள்.

The post உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள்: வங்கக் கடலின் ஓரத்திலே சிங்கம் சிஎஸ்கே குகையினிலே: மும்பைக்கு இன்று முதல் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: