இதனிடையே எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பான Grok Al, மொழிகளின் ஒலிகளையும் அதன் நுணுக்கங்களையும் சொற்களின் பொருளையும் புரிந்து கொண்டு மனிதர்கள் பேசும் பாணியிலேயே மொழியை கையாளுவதாக பலரும் புகழ்ந்தனர். இந்நிலையில், பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டவர்களை பற்றி மிக மோசமான கருத்துக்களை இந்தி மொழியில் Grok Al தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post அரசியல் தலைவர்கள் பற்றி மோசமாக கருத்து தெரிவித்த Grok Al: ஒன்றிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாகத் தகவல்! appeared first on Dinakaran.