முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர், மார்ச் 20: முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை ( 21ம் தேதி ) அன்று காலை 9 மணிக்கு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 5 வது தளத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் அம்முகாமில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி மற்றும் இதர நிதியுதவிகள் குறித்தும் விளக்கப்பட உள்ளதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: