எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்களின் தொகுதிகள் மற்றும் மாநில திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அரசும் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. இந்நிலையில், நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினர் ரிச்சர்ட், மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கவில்லை என கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடைகளை திறந்துள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.
The post புதுச்சேரியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு! appeared first on Dinakaran.