இதனால் மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே பேருந்தை ஓட்டுனர் அண்ணா மேம்பாலத்தில் நிறுத்தினார். பிறகு அந்த நபரை பயணிகள் படித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, தி.நகர் துக்காரம் உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சையது அப்துல் ரஹ்மான் (40) என தெரியவந்தது. அதைதொடர்ந்து சையது அப்துல் ரஹ்மான் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
The post மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசாமி கைது appeared first on Dinakaran.