முன்னதாக, பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்பு ரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடர்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியது. இந்நிலையில், டெல்லியில் இன்று காலை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி, ‘உலகளாவிய சவால்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதம் நடத்தினோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
The post நியூசிலாந்து பிரதமரை சந்தித்த ராகுல்: இருதரப்பு உறவு குறித்து விவாதம்! appeared first on Dinakaran.