கோயம்பேடு மார்க்கெட்டில் மதுக்கூடமாக மாறிய கழிவறைகள்

அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி, பழம் மார்க்கெட்டில் உள்ள கழிவறைகளை மதுஅருந்தும் இடமாக மாற்றிவிட்டதால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி, பழம் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தினமும் இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மது போதையில் மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துவந்தனர். இவற்றை தட்டிக்கேட்கும் வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். எனவே, மார்க்கெட்டில் மர்ம நபர்கள் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தபோலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு காய்கறிகள், பழம் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கஞ்சா, மதுபோதையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களை தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் மர்ம நபர்களை விரட்டியடித்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும்’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் மதுக்கூடமாக மாறிய கழிவறைகள் appeared first on Dinakaran.

Related Stories: