நீதிமன்றக் காவலில் உள்ள ரன்யா ராவை, இடையில் 3 நாட்கள் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்தனர். நீதிமன்றக் காவலில் உள்ள ரன்யா ராவ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க டிஆர்ஐ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
The post தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.