ஒவ்வொரு பகுதியிலும் அதிக தேவை, நடுத்தர தேவை மற்றும் குறைந்த தேவை என மூன்று வகையான பார்க்கிங் உருவாக்கப்பட உள்ளது. அதற்கு கட்டணத்தை செலுத்தி கார்களை பார்க்கிங் செய்யும் இடம் என காட்டி பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல அகலமான சாலைகளில் பார்க்கிங் உருவாக்கப்பட்டு அந்த இடங்களில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் குடியிருப்பாளர்கள், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கான பார்க்கிங்கை உருவாக்க வேண்டும் எனவும், 20% மின்சார கார்களின் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை சட்டமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post பார்க்கிங் இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது.. சென்னை மாநகராட்சியில் விரைவில் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை!! appeared first on Dinakaran.