ஒடுகத்தூர், மார்ச் 8: ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமால்(25) என்பவரும், சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமாலுக்கும் அந்த சிறுமிக்கும் கிராமம் அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. பின்னர், இருவரும் இருவீட்டாரின் ஒப்புதலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 4 மாதம் கர்ப்பமான சிறுமி குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் வயது 17 என தெரிந்ததும் மருத்துவமனை நிர்வாகத்தினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது.
தொடர்ந்து, மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய திருமால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
The post மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.