மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் (26-10-2024) ஐ.என்.டி. – டி.என் -06 – எம்.எம். – 5102 (IND-TN-06-MM-5102) என்ற பதிவெண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த (2024) ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்றைய (27.10.2024) நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
The post இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.