மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையில் இருந்து 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களுக்கு 28.10.2024 முதல் விநாடிக்கு 25 கனஅடி வீதம் தொடர்ந்து 18 நாட்களுக்கு சாத்தையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சாத்தையாறு அணை முறை சார்ந்த கண்மாய்களின் கீழ் உள்ள 1499.59 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையில் இருந்து 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: