ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நவ.4-க்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் நவ.4-க்கு ஒத்திவைத்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸ் அண்மையில் தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக 28 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றப்பத்திரிகை நகலை காகிதங்களில் வழங்க வேண்டும், பென்டிரைவ் மூலம் வேண்டாம் என குற்றவாளிகள் தரப்பு தெரிவித்தது. பி.என்.எஸ். சட்டப்பிரிவின்படி பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் தரப்பு குற்றப்பத்திரிகை நகலை பெறாததால் வழக்கு விசாரணையை நவ.4-க்கு ஒத்திவைத்தது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நவ.4-க்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: