பாதம் பாதுகாப்போம் திட்டத்திற்கு ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை : நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் “பாதம் பாதுகாப்போம் திட்டம்” அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.மாநிலத்தின் முதன்மையான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

The post பாதம் பாதுகாப்போம் திட்டத்திற்கு ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: