பாரிமுனை ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி குண்டு திடீரென வெடித்ததால் பரபரப்பு

சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி உள்ளது. இங்கு ஷிப்ட் முறையில் பாதுகாப்பிற்காக போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரிசர்வ் வங்கி பாதுகாப்பு பணியில் வழக்கம்போல் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென அலாரம் ஒலித்துள்ளது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தர்ஷினி, அந்நியர்கள் நுழைந்து விட்டார்களோ என்ற அச்சத்தில் துப்பாக்கியில் குண்டை லோடு செய்து, அந்த பகுதியில் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லை என்றதும், லோடு செய்த குண்டை எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவரது கை பட்டு துப்பாக்கி வெடித்துள்ளது.அதிலிருந்து வெளியேறிய குண்டு சுவரில் பட்டு விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாரிமுனை ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி குண்டு திடீரென வெடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: