- மதுரா
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணா
- கல்வி
- அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: மதுரையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் சூழ்ந்து இருக்கக்கூடிய நிலையில் போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; மதுரையில் முழுவீச்சில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறேன். சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம்.
அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் சில இடங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள அமைச்சர் மூர்த்தி, ஆட்சியரிடம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். மதுரையில் 8 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
The post மழை பாதிப்பு.. மதுரையில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!! appeared first on Dinakaran.