×
Saravana Stores

தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர் ரயில் மோதி பலி

பாவூர்சத்திரம்,அக்.26: தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய வாலிபர் ரயில் மோதி பலியானார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்புரம் – கணக்கநாடார்பட்டி ராமநாதபுரம் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் அயோத்தி (40). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தரீஜா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அயோத்தி வேலைக்கு சென்ற களைப்பில் தனது ஊருக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் அயோத்தியின் தலையில் ஏறி, இறங்கியதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதனை பார்த்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தென்காசி ரயில்வே போலீஸ் நிலைய எஸ்ஐ மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அயோத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர் ரயில் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Pavoorsatram ,Ayothi ,Ariyapuram-Kanadarpatty Ramanathapuram street ,Pavursatram ,Tareena ,
× RELATED சொல்லிட்டாங்க…