அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதுவையை போல் தீபாவளி ஊக்கத்தொகை கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கட்டுமானம் மற்றும் அமைப்புசார தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு சென்றால்தான் ஊதியம் பெற முடியும். அவர்களுக்கு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள்தான் வேலை கிடைக்கிறது. சில நேரங்களில் வேலையில்லாமல் பட்டினியோடு இருக்கிறார்கள். மற்றவர்களை போல், தீபஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5000, அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.1500 வழங்கி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் கருணையோடு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5000, அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.2500 தீபாவளி பரிசாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதுவையை போல் தீபாவளி ஊக்கத்தொகை கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: